கலைஞர் கேள்வி பதிலில் இருந்து
கேள்வி: "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.
பதில்: அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.
இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு என்ன தண்டனை தரலாம் ? ரேஷன் கார்டுகளை பிடுங்கலாம். அரசு வேலை இனிமேல் இல்லை என்று சொல்லலாம். அதே ஊர்ல இருந்துக்கிட்டு அங்க படிக்காத பசங்களுக்கு எஞ்சினீயரிங், மெடிக்கல், அரசு கல்லூரியில் இடம் தராமல் தடுக்கலாம், அரசு கொடுத்த டிவி லேப்டாப் மிக்ஸி கிரைண்டர் எதாவது இருந்தா அதை பிடிங்கிடலாம்.