Wednesday, December 19, 2007

கொலைவெறி வலைப்பதிவர் சந்திப்பு (ப்ரார்த்தனாவில்) !!!!!!

பிரார்த்தனா ட்ரைவ் இன்னில் என்னுடைய வாடகைக்கார் நுழைந்தபோது மணி ஆறு நாற்பது..

கண்டிப்பாக வருவேன் என்று சொன்ன டி.பி.கஜெந்திரன்,திரும்பி
பார்த்ததில் கழுத்து சுளுக்கியதால் சத்தியமாக வரமாட்டேன் என்று
குறுஞ்செய்தி அனுப்பினார்..

(பாசக்கார பயலுக, ஓட்டறதுக்காவது நம்மளை
நியாபகம் வெச்சிருக்கானுங்களே...)

திரட்டியில் விருது தரும் விஷயத்தை முன்பே தெரிந்துகொண்டு,தினமும்
சமூகம்,கவிதை,கதை,கட்டுரை,என்று போட்டுத்தாக்கி எழுதிவரும்

"சாவி.மன்னன்" ஏற்கனவே வந்து டேபிளில் சிவப்பு நிற கதர் துண்டுபோட்டு இடம் பிடித்திருந்தார்..

(அவனுங்கதான் அப்படி...நான், என் வாயால
கேடின்னுல்லாம் சொல்வேனா ??? என்னயிருந்தாலும் பழகுன பாசம்
சும்மாவிடுமா..)

(டேய் நடுவர் குழுவுல மட்டும் தயவு செய்து
சேர்த்துடாதீங்கடா ப்ளீஸ்)

சொன்னபடி ஏபிசிடி, மரஓனாய் முகேஷ், செந்தழல் ரவி, சேலத்தில் இருந்து ஓசை பில்லா, பிபகூகா, கிருட்டினா, ஸைமல்ட்டேஷன் ஆகியோர் ஏற்கனவே வந்து இருக்கைகளை ஆக்ரமித்திருந்தார்கள்...

என்னுடைய பதிவில் நேத்தே போட்டபடி ( எப்படி?) ப்ரெஞ்ச் ட்ரீட் என்பதால்
ஆளுக்கு பத்து ரூபாயாவது கண்டிப்பாக வைத்திருப்பார்கள் என்று நம்பி
அவர்களை நோக்கி மேலே நடக்கிறேன்...

இப்படித்தான் என்னுடைய நேற்றைய பதிவில் இரண்டு பாரா அறுத்திருந்தேன்... ""போன முறை செய்து நன்றாக வெற்றி கண்ட அதே முறைதான்.

மீட்டிங்கிற்கான செலவு பற்றி பேசுகிறேன். இம்முறையும் சந்திப்புக்கு வருபவர்கள் எல்லோருமே
செலவை பகிர்ந்து கொள்கிறோம்.

செலவு என்ன பெரிய செலவு, போண்டா (நோட் திஸ்
பாய்ண்ட்), காபி (பில்டர் / கிங்ஸ் காபி) ஆகியவைக்கு ஆவதுதான்.

நிறைய பேர் வந்தால் ஒரு ஹாலை அங்கே இரண்டு மணி நேரத்துக்கு எடுத்து அறுக்க வேண்டி வரலாம்.

சாதாரணமாக இது தேவைப்படாது, பார்க்கலாம்.

போன முறை ஒரு சிறு குறைபாடு தென்பட்டது.

பலர் காபி மட்டும் போதும் எனக் கூறிவிட்டனர். (காசு இருந்திருக்காது)

ஆனால் டிவைடிங் சிஸ்டமில் எல்லோரையும் போலவே காண்ட்ரிப்யூட் செய்தனர் (ஓ இருந்திருக்கு).

எனக்கு சட்டைக்குள் உறுத்தலாக இருந்தது. இம்முறையாவது தயவு செய்து கூச்சமின்றி ஆர்டர் செய்யுங்கள்.

பிரார்த்தனா டிஃபனை அனுபவித்து உண்ணவும்.

சற்றே காலி வயிற்றுடன் வரவும். வழக்கம் போல வசூல் செய்யப் போவது மொழிபெயர்ப்பாளன் காண்டு கஜேந்திரனே !!!.

போண்டா மட்டுமே உணவல்ல, இட்லி வடையும் (ஜெயா
டிவி அபிஹியல் பதிவாளர் அல்ல), ஆனியன் ஊத்தப்பமும், பூரி கிழங்கும்,
பாஸந்தியும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும்.

பாஸந்தி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு ஒரு
நினைவூட்டல்...

சமீபத்தில் (முடியல..எத்தனை பேரு இதையே யூஸ் பண்ணி
ஓட்டுவீங்க - சரி வேற வழியில்ல ) சமீபத்தில் 1946 ல் வந்த சர்வர்
சுந்தரம் படத்தில் நாகேஷிடம் சினேகா கேட்கும் அதே பண்டம் இந்த பாஸந்தி...

ஓக்கே கம்மிங் பேக் டு த பாயிண்டு ( இது தினமடல் சந்துமணி (காமேஷ்) இடம் இருந்து சுட்டது)

This will be strictly French treat. "

ஓக்கே ஓக்கே, லெட்ஸ் கோ டு டயலாக் மோட்...

சாவி: என்ன காண்டு சார்...சாப்ட்டேளா ?

காண்டு: என்ன சாவி..ஆரம்பத்துலயே கிண்டல் பலமாருக்கு...

ஏபிசிடி : எனக்கு ஒன்னுமே புரியல...விளக்கவும்..

மரஓனாய்: சார் அதை விடுங்கோ...நாம வந்த வேலையை பார்ப்போம்...

ஸைமல்டேஷன்: மரஓனாய்...செத்த நேரம் சும்மா இருங்க...விவாதத்துக்கு போலாம்...

செந்தழல்: டேய் செத்த நேரம் எப்படிடா சும்மா இருக்கறது ?

ஓசை பில்லா: வாயப்பொளந்துகுட்டு தான் இருக்கனும் ரவி...நெத்தியில காசோட...

கிருஷ்னா: சார் அப்பலேருந்து என்னை மொறைச்சு மொறைச்சு பாக்குறார் இந்த பில்லா..அத மொதல்ல விவாதப்பொருளாக்குவோம்...

மரஓனாய்: சார், விவாதம் எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம்...மொதல்ல
வந்தவேலையை பார்ப்போம்..

சாவி: டேய் நீ கொஞ்சம் கம்னு இருக்கியா...நான் சார்வாளோட டிஸ்கஷன்
பண்றதுக்கு பர்மாவுலருந்து வந்திருக்கேன்...

ஓசை பில்லா : பார்மாவுலருந்து தேக்கு தானே வரும்...நீங்க ஏன் வந்தீங்க ?

ஏபிசிடி: சார் எனக்கு புரியல...கொஞ்சம் விளக்குங்க...

செந்தழல்: நீ போய் ஓட்டல்ல பாத்திரத்த எல்லாம் விளக்கு...அப்புறமா நான்
விளக்கறேன்...

ஏபிசிடி: கிண்டல் வேண்டாம்..நாம ஏன் இங்க வந்திருக்கோம்...அதை மொதல்ல எனக்கு புரியவைங்க...

ஓசை பில்லா: நான் காரை பத்தி டிப்ஸ் கொடுக்க வந்தேன்...

காண்டு: நான் சொல்றேன் காரைப்பத்தி...நான் வாடகைக்காரை என்னோட கார் மாதிரி ட்ரீட் பண்ணி எஞ்சின் ஆயில் எல்லாம் வாங்கி ஊத்தறவன்...நான்
சொன்னாத்தான் சரியா இருக்கும்...

சாவி: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பில்லா...இந்தாளை கொஞ்ச நேரம் சும்மா
இருக்கச்சொல்றீங்களா ?

ஓசை பில்லா: ம்ஹும்...அது என்னால முடியாது...ஸைமல்ட்டெஷன் இல்லைன்னா மரஓனாய்க்கிட்ட சொல்லுங்க...

மரஓனாய்: சார் அவரை அடக்கறது இருக்கட்டும்...நாம வந்த வேலையை பார்ப்போமா ?

சைமல்ட்டேஷன்: இவன் வேற வந்ததுலருந்து தேஞ்சுபோன டேப்ரிக்கார்டர் மாதிரி ஒளறிக்கிட்டே இருக்கான்...

செந்தழல்: சார், டேப் ரிக்கார்டர் தேயாது, கேசட் தான் தேயும்...

ஓசை பில்லா: ஏய் கம்மியூனிக்கேஷன் மீடியாவுல இருக்கற நான் தான் இந்த
மாதிரி மேட்டரை டீட்டெயிலா சொல்லனும்...

செந்தழல்: சரி நீங்களே சொல்லித்தொலைங்க...

ஓசை பில்லா: டேப் ரிக்கார்டர் தேயாது...கேசட் தான் தேயும்..

செந்தழல்: அண்ணே அதைத்தானே நானும் சொன்னேன்...

ஓசை பில்லா: தம்பி, நான் தான் சொல்லனும்னு சொன்னேனே தவிர அதையே சொல்லமாட்டேன்னு சொன்னேனா ? இது தான் சேலம் குசும்புன்றது....ஸ்டாஷி ஏழுமலை சேலத்துக்காரர்னே எனக்கு முந்தா நேத்துத்தான் தெரியும்...என்னோட பிரண்ஸ் லாரா, மெக்ராத், ப்ரெட் லீ, ஜெட் லீ கூட எல்லாம் போட்டோ எடுத்திருக்காங்க தெரியுமா ?

செந்தழல்: அண்ணே, என்ன கொடுமை இது...சானியா மிர்சா கூடத்தான் ஒய்.எஸ்.ஆர் கூட போட்டோ எடுத்தா...அதுக்காக அவளை என்னோட ப்ரெண்டுன்னு சொல்ல முடியுமா ?

ஓசை பில்லா : ஒன்னுமே புரியலயே ? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ?

ஏபிசிடி : எனக்கும் புரியல...எனக்கும் புரியல...தயவு செய்து இதையாவது விளக்கவும்...

செந்தழல்: ஹைய்யோ முடியலயே !!!!!!!!!!!!!!!

காண்டு: இவ்ளோ நேரம் எனக்கு டயலாக் கொடுக்காம இருக்கறதுக்கு உன் மேல கோர்ட்ல கேஸ் போடுவேன்...

மரஓனாய்: ஏன் தேவை இல்லாம பேசுறீங்க சார்...நாம வந்த வேலையை பார்ப்போமா ?

க்ருஷ்னா: சார் எனக்கு நெஞ்சு வலிக்கறமாதிரி இருக்கு...நான் பாத்ரூம்
வரைக்கும் போயிட்டு வந்திரட்டுமா..?

செந்தழல்: லூசாப்பா நீ ? நெஞ்சு வலிச்ச்சா எதுக்கு பாத்ரூம் ?

சைமல்ட்டேஷன்: சார்..கொஞ்ச நேரம் தனிமனித தாக்குதல நிறுத்திட்டு பொது விஷயம் பேசுவோம்...

செந்தழல்: ஹப்பா...இவன் மனுஷன்...சரி என்ன விஷயம் பேசலாம்...

ஓசை பில்லா: நான் தான் பேசுவேன், நான் தான் பேசுவேன்...கார்ல கறுப்பு
கண்ணாடி வெக்கிறது தப்பு...எல்லாரையும் ரோட்ல லவ் பண்ண விடுவீங்களா மாட்டீங்களா ?

செந்தழல்: பில்லா...ப்ளீஸ்...கொஞ்சம் அடுத்தவங்களுக்கு வாய்ப்பு
கொடுங்க...அதுவும் தனிமனித தாக்குதலற்ற பொதுவிஷயம் அப்படீங்கறார்
சைமல்ட்டேஷன்...நீங்க பேசுங்க சார்...

சைமல்ட்டேஷன்: காண்டு சார், வரவணைக்கிட்ட வாங்கின கிங்ஸ் எங்க ?
சுகுணாக்கிட்ட வாங்கின பியர் எங்கே ?

காண்டு : (பயங்கர டென்ஷனாகிறார்) அதுக்கு நான் அப்பவே ப்ரெஞ்சு ட்ரீட்
மூலம் பேய் பண்ணிட்டனே ? மிச்சம் பதினாலு ரூபாய செந்தழலுக்கு டி.டி
எடுத்து அனுப்பினேனே ?

சாவி: என்னது பேய் பண்ணீங்களா ? நீங்க பேய் பிசாசு எல்லாம் வெச்சிருக்கீங்களா ?

காண்டு : யோவ்....டங்கு ஸிலிப்...அது பே...கிவ்விங் மனி...பிரெஞ்சுல பான்
வாயேஜ், உருதுல பான் பாராக்க்..

செந்தழல்: அதை விடுங்க...எனக்கு டி.டி வரல...எப்போ அனுப்பப்போறீங்க... (
காண்டு சைலண்டாகிறார்)

ஏபிசிடி: எனக்கு எதுவுமே புரியல...

செந்தழல் : உங்களுக்கு என்ன தான் சார் புரிஞ்சுருக்கு ?

ஓசை பில்லா: (கொலைவெறியுடன்) டேய், இவனா பொது விஷயம் பேசுறான் ?

செந்தழல்: அட அதுதானே ? என்ன கொடுமை கோயிந்தன்..

மரஓனாய்: ப்ளீஸ்...நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்...நாம வந்த வேலையை பார்க்கலாமே...

செந்தழல்: எவண்டா இவன் வந்ததில் இருந்து வந்த வேலையை பார்க்கலாம்,
வராதவேலையை பார்க்கலாம்னு ஒளறிக்கிட்டே இருக்கான்...அப்படி என்னதாண்டா நீ சொல்ல வரே ? எங்க சொல்லு...

ஓசை பில்லா: ஆமாம் சொல்றா...

காண்டு, சைமல்ட்டேஷன், க்ருஷ்ணா எல்லாரும் கோரஸாக வற்புறுத்துகிறார்கள்...

மரஓனாய்: சொல்லிடுறேன்...இப்ப சொல்லிடுறேன்...

செந்தழல்: டேய் நாங்க இப்பவே காண்டுல இருக்கோம்...வீனா பிரார்த்தனாவுல கொலைவிழ வைக்காத...சொல்றா...

பிபகூகா: நான் வந்ததில் இருந்து எதுவும் பேசலை...இருந்தாலும்
சொல்றேன்...மரஓனாய்...தைரியமா சொல்லுங்க...

மரஓனாய்: ஹி ஹி சொல்றேன் சொல்றேன்....பேரர் !!!!!!!!!!!!!!!! ரெண்டு
போண்டா !!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொலைவெறியுடன் சாவி, ஏபிசிடி,செந்தழல், பில்லா இருவரும் மரஓனாயை துரத்த, அவர் ஓட, காண்டு முதல் ஸைமல்ட்டேஷன் வரை எஸ், எஸ், எஸ் என்று இளிக்கிறார்கள்...

பின்னால் போடும் குறிப்புகள்:

திடீர் திருமணத்தாலும், அலுவலக வேலை காரணமாகவும் பதிவுகள் அதிகம்
எழுதாததனால் தமிழ் வலையுலகமே போரடிச்சு போச்சாமே ( டேய் இது ரொம்ப ஓவர்)...மற்றபடி பதிவெழுத அழைத்த தமிழச்சி, சிந்தாநதி, மற்றும்
ஆயிரக்கணக்கான வாசகர்கள் ( ப்ளீஸ் வேணாம் - முடியல) ஆசைப்படி ஏதோ ரெண்டு மொக்கை போஸ்ட் போட்டு என்னுடைய இருப்பை காட்டிக்கிட்டாலும், அதுக்காக டோண்டு ராகவனோட அரதப்பழசு வலைப்பதிவர் சந்திப்பை எடுத்து கிண்டல் பண்ணனுமா என்று கொலைவெறிடன் கேட்காதீங்க...வேற வழியில்ல...டோண்டு சாரை
ஓட்டி - போஸ்ட் போட்டு ஆரம்பிச்சாத்தான் வலைப்பதிவு ஓஹோன்னு ஓடும்..பேபி பவன், இரண்டாம் சொக்கன், குட்டிப்பிசாசு போன்றவர்கள் கவனிக்க...குசும்பன் எதுவும் சொல்லிக்கொடுக்கலையா ? )

டிஸ்க்ளெமர் : இந்த பதிவு யாரையும் குறிப்பது அல்ல, டோண்டு சாரை மட்டும் குறிப்பதாகும் ( ஹி ஹி - இது உனக்கே ஓவரா தெரியல...ஓட்டறது நல்லா ஓட்டுங்க...அப்புறம் சார் மோர்னு போட்டு டிஸ்கி போடுங்க...அவரும்
சிரிச்சுட்டு ரெண்டு பின்னூடம் போட்டுட்டு போயிருவார்...ஹும் எப்பத்தான்
திருந்தி இந்த ஆரிய மாயையில் இருந்து விடுபடுவீங்களோ)

5 comments:

Osai Chella said...

adapaavi... aarampichittiyaa... en ooraiye maathittaye! ithukku per thaan Bangalore Kusumbu!

enRenRum-anbudan.BALA said...

ரவி,

ரியலி சூப்பர் :) நெஜமாவே நல்ல நகைச்சுவை உணர்வு தான் உங்களுக்கு, டோண்டு மாட்டினாரா அதுக்கு ;-)

//திடீர் திருமணத்தாலும், அலுவலக வேலை காரணமாகவும் பதிவுகள் அதிகம் எழுதாததனால் தமிழ் வலையுலகமே போரடிச்சு போச்சாமே
//
என்ன, கண்ணாலமா ? சொல்லவே இல்ல ?

ரவி said...

thanks sellaa...how thing ? where is the car post ?

ரவி said...

bala...

i dont have any go !!! all the blogging world know that hehehehe :)

yes...its 'திடீர்' marriage. thats why :)))

enRenRum-anbudan.BALA said...

Ravi,
//
yes...its 'திடீர்' marriage. thats why :)))
//
I am asking seriously, Is your marriage over ????

Pl. answer seriously :)))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....