Saturday, October 06, 2007

வடமொழி இராமாயணம்

இப்பொழுது உள்ள வடமொழி இராமாயணம் கி.மு .200 இல் தொகுக்கப் பட்டது.

சாதகக் கதைகளில் கூறப்பட்ட வகையில் வழங்கிய இராமாயணக் கதை பல
நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்தது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இக்கதை தொடர்பான பாடல்கள் திரட்டப்பட்டன. திரட்டப்பட்ட பின்பும் இராமாயணம் வளர்ந்து கொண்டு செல்வது நின்று விடவில்லை. அது இன்றுவரையும் வளர்ந்துகொண்டே வருகின்றது.

"இன்றுவரையும் இராமாயணத்தின் பின் சேர்ப்பு அல்லது இடைச் செருகல் வளர்ந்து
வருகின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச்சி வெண்டியதில்லை. பேர்போன இராமாயண
உரையாசிரியரான காதக என்பவர் இடைச் செருகல் என்று குறிப்பிட்ட நீண்ட சருக்கம் மாத்திரமல்ல; அவர் காலத்திலில்லாத பல சருக்கங்களும் இன்றைய இராமாயணத்திற் காணப்படுகின்றன.

அன்றைய இராயணத்தின்படி இராமருக்குப் பல மனைவியர் இருந்தனர். காளிதாசரும் அவருக்குப் பின் வந்த புலவர்களும் அவருக்கு ஒரு மனைவி மாத்திரம் இருந்தார் எனக் கூறுகின்றனர். பரதனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அக்கால இராமாயணம் தசரதருக்கு 350 மனைவியர் இருந்தனர் என்று கூறுகிறது. தமது முறைமையான மனைவியரைத் தவிர தசரதன் , இராமன், பரதன் முதலானோர் பல மனைவியர் உடையவராயிருந்தனர் எனத் தெரிகிறது.

"கௌதம புத்தர் காலத்திற்குப் பின்பே இராமாயணம் தொகுக்கப்பட்டது! என்பதில்
சிறிதும் ஐயமில்லை. இராமாயணத்தில் புத்தரைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அது, புத்தரைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.
இராமாயணம் கிறித்துக்கு முன் தொடங்கி இரண்டாம் நூற்றாண்டு வரையில்
தொகுக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் தொகுக்கப்பட்ட பின்னரே இராமாயணம் தொகுக்கப் பட்டுள்ளது.

மகாபாரதத் தொகுப்புக்காலம் அலெக்சாந்தரின் படை எடுப்புக்
காலத்துக்குப் பின்பேயாகும் ., மகாபாரதத்தில் கிரேக்க வீரர் பெயர் குறிப்பிடப்பட்டுப் புகழப் பட்டுள்ளார்கள். ஆதிபருவத்திலுள்ள சுலோகங்கள் அலெக்சாந்தரின் படையெடுப்பு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது. மகாபாரதத்துக்குப் பின் இராமாயணம் தொகுத்தவர் சபாபருவம் ஐந்தாம் சருக்கத்திலுள்ளவைகளை அப்படியே அயோத்தியா காண்டத்தில் படி எடுத்து எழுதியிருக்கின்றார்.

"இராமாயணம் தொகுத்தவரின் திறமைக் குறைவினால் வால்மீகியின் ஆதிஇராமாயணத்தில் வைணவக் கொள்கைகள் தொடர்பான எதுவும் இருக்கவில்லை என நன்கு அறியமுடிகிறது "

அவதாரங்கள் பிற்காலக் கற்பனைகள்:

"வாசுதேவனுக்கு முற்பட்ட வீரர் விட்டுவிணுவின் அவதாரங்களாகக் குறிக்கப்
பட்டுள்ளனர். இது பௌத்தர் முன் பலமுறைகளில் புத்தர் அவதாரஞ்செய்தார் என்று
சொல்லும் கொள்கையைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். மகாபாரதத்தில் கூறப்படும்
இராமன் விட்டுணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறான். இராமோபாக்கியானத்தில்
இவ்வாறு சொல்லப்பட்டிருப்பதாலே வால்மீகியின் இராமாயணத்தை மாற்றி எழுத வேண்டிய நிலையேற்பட்டது."

"நாரதர் இராமனை அவதாரமாகக் கொள்ளவில்லை. அவன் உயர்ந்த வாழ்க்கையை நடத்தி மரணத்தின் பின் பிரம உலகத்தை அடைந்தவராகக் கூறியிருக்கிறார். (lbid p.29)

கட்டுரை : இரவா (vasudevan.dr@gmail.com)

கட்டுரையை படிக்கும் சகோதரர்கள், திரு இரவா அவர்களிடம் நேரடியாக மீதி விவாதங்களை நடத்திக்கொள்ளுங்கள்...!!

No comments:

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....