Wednesday, April 04, 2007

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

<a href="http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html"> இங்கே</a>

வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் ?

தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...

பார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

4 comments:

Anonymous said...

ரவி,

சமீபத்தில் எங்காவது தலையில் பலமாக அடிபட்ட ஞாபகம் இருக்கிறதா? எங்காவது விழுந்துவிட்டீர்களா?

:-)))

டாம் அண்ட் ஜெரியில் திடீரென்று டாம் (பூனை) அடிவாங்கியதும் ஜெர்ரி மாதிரி (எலியாக) மாறிவிடும். ஜெரி மிகவும் கவலைப்பட்டு அது டாமாக (அது பூனையாக) மறுபடியும் மாற்றப்பாடுபடும்.

அதுபோல, எல்லோரும் நல்லதே பேச ஆரம்பித்தால் இணையத்தில் காமெடி இருக்காது.

இட ஒதுக்கீட்டுக்கு ஏலம் போடும் சில "குழல்கள்", "பா.பா" க்கள் இருந்தால்தான் நமக்கு "லக்கி". இல்லாவிட்டால் வெளியே மிதந்து ஓசை போடுவார்கள் இந்த செல்லா காசுகள்.

இப்படியே இருந்துவிட்டு போகவும். நமக்கும் பொழுது போகும்..

சென்ஷி said...

//இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...//

இதை எத்தனைப்பேரு சரியா புரிஞ்சுக்கிட்டு பதில சொல்வாங்கன்னு தெரியல...

//வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க..//


இப்போதும் அவர்கள்தான் உபயோகித்துக்கொள்கின்றனர். எத்தனை பேருக்கு சாதாரண சட்ட அறிவு, கடன் வாங்கி படிக்கும் வசதி, மாணவர்களுக்கு கிடைக்கும் உபரி சலுகைகள் பற்றி தெரியும் என்று தெரியவில்லை. என் குடும்பத்தில் நான் முதல் பட்டதாரி என்பதால் எனக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகைக்கு (ரூ. 1200/-) ரூ.300 லஞ்சம் கொடு. கையெழுத்து போடுகிறேன் என்று கூறியது. ஐயர் அல்ல. இதே D பிரிவு ஓபிசி மக்களில் ஒருவன் தான்.. :(

ஒருவனுக்கு உரிமை கிடைக்கும்போது அவன் அதை தவறு செய்யக்கிடைத்த வாய்ப்பாகத்தான் உபயோகப்படுத்துகிறான். அவனுடைய அகராதியில் கடமை என்பது காசு வாங்கு என்பதாக உள்ளது. இப்படி லஞ்சம் வாங்கி உடம்பு, குடும்பம் வளர்ப்பவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது. இடஒதுக்கீடு என்பது இவனின் குழந்தைக்கும் ஒரு இடம் கொடுக்கும்.

அப்போது அவர்களுக்கு எதிராக யார் குரல் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்க வேண்டியுள்ளது.

நான் ரவியின் கருத்துடன் ஒத்துப்போகின்றேன்...

(ரவி.. என்கிட்ட ஏது கருத்துன்னு கடிக்கக்கூடாது)

சென்ஷி

Anonymous said...

என் மண்டை நன்றாகத்தான் உள்ளது அனானி :)))))))))))))

Anonymous said...

சென்ஷி...

நல்லா சொன்னீங்க...

ஓ.பி.சி சர்ட்டிபிக்கேட்டை கூவி விற்பவனும் இருக்கிறான்....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....